ஜெனீவா, ஜூலை 8- கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதாரக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உலக சுகாதாரக் கழகத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஏராளமான நாடுகளில் பரசோதனை குறைந்துவிட்டது. தடுப்பூசிகள் பல ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. இது சரி செய்யப்பட வேண்டும். வைரஸ் தன்னை மாற்றிக் கொள்ள, மாற்றிக் கொள்ள, தடுப்பு மருந்துகளும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன. அரசாங்கம், விஞ்ஞானிகள், உற்பத்தியாளர்கள், உலக சுகாதாரக் கழகம் மற்றும் குடிமக்கள் ஆகிய அனைவருக்கும் அவரவர் பணிகளை நிறைவேற்றும் கடமை உள்ளது” என்றார்.