world

img

ஜப்பான் : பாதியாகக் குறைந்த விவசாயிகள் எண்ணிக்கை

டோக்கியோவில் உள்ள ஜப்பான் மேலவைத் தொகுதி ஒன்றில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யமசோ டாகு வெற்றி பெற்றுள்ளார். தனிப்பட்ட தொகுதி ஒன்றில் வென்றதோடு, விகிதாச்சாரப்படியான தொகுதிகள் ஒதுக்கீட்டில் 3 மேலவை உறுப்பினர்களையும் கட்சி பெற்றிருக்கிறது. மேலவையில் தற்போது ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர்.

டோக்கியோ, ஜூலை 13- தங்கள் நாட்டில் விவசாயப் பணியில்  ஈடுபட்டிருந்த விவசாயிகளின் எண்ணிக்கை  கடந்த 17 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து ள்ளதாக ஜப்பான் விவசாயத்துறை வெளி யிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்தில் ஈடுபடும் பெரு நிறு வனங்களில் பணிபுரியும் விவசாயிகளின் எண்ணிக்கையும் சேர்த்து 9 லட்சத்து 75  ஆயிரத்து 100 என்று அண்மையில் எடுத்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது அதிகாரப் பூர்வ புள்ளிவிபரங்களாகும். 2005 ஆம்  ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்து  80 ஆயிரமாக இருந்திருக்கிறது. பெரு நிறு வனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்குவதால், அதன் விவசாய நிறு வனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பொறுப்பில் இருந்து வரும் அரசுகள், குறிப்பாக தாராள ஜனநாயகக் கட்சியின் அரசு, உணவு இறக்கு மதி மற்றும் அதன் தொடர்பான கொள்கை களை தளர்த்தி வந்துள்ளன.

இந்தக் கொள்கை மாற்றங்களால் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, கொரோனா பெருந்தொற்றும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிசி மற்றும் பால் ஆகியவற்றின் விலை கள் சரிந்து வருவதைத் தடுக்க எந்த முயற்சி யையும் அரசு எடுக்கவில்லை. சாதாரண விவ சாயிகள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை யில்லை என்பதையே இது காட்டுகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத் தில் முன்னெடுக்கிறது. அண்மையில் நடந்த மேலவைத் தேர்தலிலும் அதை ஒரு தேசியப் பிரச்சனையாக மாற்றியிருக் கிறார்கள். நாட்டின் தேசியக் கொள்கை யானது, விவசாயத்தைக் குடும்பங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகை யிலும், நாட்டின் உணவு இருப்பில் தற்சார்பை எட்டும் வகையிலும் இருக்க வேண்டும் என்று தங்கள் தேர்தல் பிரச்சா ரத்தில் எடுத்துரைத்தனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தரும் ஆதரவு விலையை மேம்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் வரு மானத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தேவை என்றும் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள எந்தவிதக் கட்டுப்பாடுமற்ற தாராள வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, நாட்டின் உணவு இறை யாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.