world

img

சூடானில் தவிக்கும் மலையாளிகளை அழைத்து வர கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம், ஏப்.26- உள்நாட்டுக் கலவரத்தைத் தொடர்ந்து சூடானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் மலையாளிகளை சொந்த ஊர்களுக்கு அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் அவர்களை அந்தந்த விமான நிலையங்களில் இருந்து கேரளாவுக்கு மாநில அரசின் செலவில் கொண்டு வர கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள கேரளாவின் குடியிருப்பு அல்லாத விவகாரங்கள் துறையிடம் (நோர்கா) ஒப்படைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.