சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு ஆயுத மோதலால் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்நாட்டின் 2. 5 கோடி மக்களுக்கு (50 சத வீத மக்கள்) மனிதாபிமான உதவி தேவைப்படு கிறது. அதில் 1. 4 கோடி பேர் குழந்தைகள் என ஐ. நா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மோதலால் 80 சதவீத சுகாதார கட்ட மைப்பு பாதிக்கப்பட்டு 65 சதவீத மக்கள் மருத்துவ சேவை பெற முடியாமல் உள்ளனர்.