world

img

மேற்குலகில் இருந்து முதல் நண்பன்

பெய்ஜிங், நவ.26- மேற்குலகில் இருந்து மக்கள் சீனக் குடியரசுடன் தூதரக உறவை ஏற்ப டுத்திக் கொண்ட முதல் நாடு கியூபா  என்றும், சீன-கியூப உறவு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான எடுத்துக் காட்டாக உருவாகியுள்ளது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். கியூபாவின் ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான மிகுவேல் டயஸ் கானெல் பெர்முடெஸ் சீனாவுக்கு பய ணம் மேற்கொண்டுள்ளார். அப்போது சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து  விவாதித்திருக்கிறார். 20ஆவது தேசிய காங்கிரஸ் நிறைவு பெற்ற பிறகு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பகுதியில் இருந்து சீனாவுக்கு முதன்முதலில் பயணம் மேற்கொள்ளும் அரசியல் தலைவர் கியூப ஜனாதிபதி என்பதை ஜி ஜின்பிங் சுட்டிக்காட்டினார். இரு நாடு களுக்கும் இடையில் சிறப்பு மற்றும் நட்புறவு இருப்பதையே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சீனாவில் புரட்சி நிறைவு பெற்ற பிறகு, அதனுடனான உறவைப் பல நாடு களும் நிராகரித்து வந்த நிலையில், மேற்குப் பகுதியில் இருந்து தூதரக உறவை கியூபாதான் மேற்கொண்டது என்று பெருமையுடன் ஜி ஜின்பிங் சுட்டிக் காட்டினார். சோசலிச நாடுகளுக்கிடை யில் நேர்மையான மற்றும் பரஸ்பர  நலன்களைக் கொண்ட ஒற்றுமை எப்படி யிருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் க்காட்டாக இந்த இரு நாடுகளின் உறவு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்

அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கை இரு நாடுகளுக்கும் இடை யில் தற்போது இருக்கிறது. இதை நடை முறை சாத்தியமான வகையில் விரி வடையச் செய்யவும், ஒருவரையொரு வர் உறுதியாக ஆதரித்துக் கொள்ள வும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பலப்படுத்த வும் தயாராக இருப்பதாக ஜி ஜின்பிங்  மற்றும் கியூப ஜனாதிபதி டயஸ் கானெல் ஆகிய இருவரும் தங்கள்  சந்திப்பின்போது ஒப்புக் கொண்டிருக் கிறார்கள். அந்தந்த நாடுகளின் தன்மைக்கேற்ப சோசலிசத்தைக் கட்டு வதில் இரு நாடுகளும் இணைந்து முன் னேறவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் சந்திப்புக்குப் பிறகு ஒரு கூட்டறிக்கையை வெளியிட்ட னர். அதில், சீன-கியூப உறவு ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இருவரின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, தியானென் மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ  மரியாதையை கியூபாவின் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். அவருக்கு 21 துப்பா க்கிக் குண்டுகள் முழக்க வரவேற்பு தரப்பட்டது. அதைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் நடந்தது. இந்த ராணுவ வரவேற்பின்போது சீன  ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன்இருந்தார்.

சோசலிசத்தை முன்னெடுப்போம்

சர்வதேச நிலைமைகள் எவ்வளவு மாறினாலும், நீண்டகால நட்பைப் பேணுவது என்ற எங்கள் முடிவில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று கூறிய  ஜி ஜின்பிங், “இரு நாடுகளின் தலை வர்கள் ஒருவரையொருவரு உறுதியாக நம்பும் நல்ல நண்பர்கள், ஒரே குறிக் கோளை நோக்கி நகரும் நல்ல தோழர் கள் மற்றும் துயரத்தில் பங்கேற்கும் நல்ல சகோதரர்கள். முந்தைய தலை முறையைச் சேர்ந்த இரு நாடுகளின் தலைவர்களால் இந்த நட்புறவு உருவாக் கப்பட்டு, பராமரிக்கப்பட்டுள்ளது” என்றார். “பெரும் சவால்களுக்கு மத்தியில் சோசலிசத்திற்கான பாதையில் கியூபா செல்கிறது. அந்தப் பாதையில் கியூபா  செல்வதற்கான அனைத்து உதவிகளை யும் சீனா செய்யும். அதில் நாங்கள் உறுதி யாக இருக்கிறோம். சர்வதேச அளவில் நேர்மையையும், நீதியையும் நிலை நாட்ட கியூபாவுடன் இணைந்து செயல் படுவோம் என்ற முடிவில் எந்த மாற்ற மும் இல்லை. அந்த செயல்பாடுகள் தொடரும்” என்று ஜி ஜின்பிங்குறிப்பிட்டார். சீனாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரி வித்துக் கொண்ட டயஸ் கானெல், மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வா னதற்கு ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்து கூறினார். மேலும் பேசிய அவர், “சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவின் அனுபவங்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வோம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அறிக்கையை கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.