சீனா,நவம்பர்.12- சீனாவில் கார் மோதிய விபத்தில் மைதானத்திற்குள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 35 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சீனாவின் ஜூஹை நகரத்தில் மைதானத்தில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக வந்த கார் மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழப்பு. 40 பேர் படுகாயம்.
காரை ஓட்டிவந்த 62 வயது முதியவரைக் கைது செய்து இது உண்மையில் விபத்து தானா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.