world

கியூபா கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டு க்கு எங்கள் சகோதரத்துவ வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சோசலி சம் மற்றும் தொழிலாளர்வர்க்க சர்வதேசி யம் ஆகிய பதாகைகளைப் பாதுகாப்பதற் கான தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தின் முன்னணிப் படையாக எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அமெ ரிக்கா எங்கள் நாட்டின்மீது பொருளாதார முற்றுகை செய்திட்ட காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய மக்களும் எங்களுக்கு உதவியதை கியூபா மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். கோவிட்-19 பெருந்தொற்று மிக மோசமான நிலை யை ஏற்படுத்தியுள்ள போதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்கள் மீது ஏற்படுத்திக்கொ ண்டிருக்கும் பொருளாதார முற்றுகை டிரம்ப் நிர்வாகக் காலத்திலும் இப்போது பைடன் நிர்வாகக் காலத்திலும் தொடர்கிறது. நம் இரு கட்சிகளுக்கும் இடையேயும் மக்க ளுக்கு இடையேயும்  மிகச்சிறந்த உறவு களை பல தலைமுறையைச் சேர்ந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விதைத்திருக்கிறார்கள். அவை எங்களை என்றென்றும் உத்வேகம் ஊட்டிக்கொண்டி ருக்கும். நம் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கை கள் தொடரும் என்று மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம். மாநாடு அனைத்து அம் சங்களிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.