வார்சா, ஆக. 22 - அரசு முறைப் பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலைநகர் வார்சாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி பல ஆண்டுகளாக இந்தியா வின் வெளியுறவுக் கொள்கை அனைத்து நாடுகளிடமிருந்தும் இடை வெளியை கடைப்பிடிப்பதாக இருந்தது; ஆனால் தற்போது இந்தியா அனைத்து நாடுகளுடனும் நட்பைப் பேண விரும்புகிறது; மேலும் அவர் களின் நலன் சார்ந்து சிந்திக்கிறது. இதன் காரணமாக உலக நாடுகள் இந்தியாவை மதிப்பதாக குறிப் பிட்டார்.
மேலும் இது போருக்கான காலம் இல்லை எனவும், இது மனித குலத்தின் மிகப்பெரிய சவால்களைச் சமாளிக்க நாம் ஒன்றுபட வேண்டிய நேரம்.
எனவே போர்களை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்து வதில் இந்தியா நம்பிக்கை வைத்திருக் கிறது எனவும் கூறினார்.
இந்த பயணத்தைத் தொடர்ந்து அவர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது போருக்கான காலம் இல்லை என மோடி பேசி இருப்பினும் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரே லுக்கு தேவையான ஆயுத உபகர ணங்களை இந்தியாவில் இருந்து ஏற்று மதி செய்ய தொடர்ந்து அனுமதி யளித்து வருகிறது என்பது அதானி நிறுவனம் மூலம் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள் ளது எனவும் 2047 க்குள் இந்தியா வளர்ந்து விடும் எனவும் வழக்கம் போல் தனது கதைகளையும் போலந்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.