ராணுவ பட்ஜெட் அளவை உயர்த்திய ரஷ்யா
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணு வத்திற்காக மட்டும் சுமார் 32.5 சதவீதத்தை ரஷ்யா ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.145 பில்லியன் டாலர்கள் ( 12.30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) வரும் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீடித்து வரும் போர், பணவீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒதுக்கீட்டிற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
கினியா கால்பந்து போட்டி வன்முறை பலி 100 ஆனது
கினியா நாட்டில் நடந்த கால்பந்து இறுதிப் போட்டியில் நடுவர் ஒரு தலைப்பட்சமாக முடிவு அளித்ததாக இரு அணி ரசிகர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. உயிரை காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் பலரும் மைதானத்தை விட்டு வெளியேற முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டு 100 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் குவிந்துள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாக். பழங்குடிகளுக்கு இடையேயான வன்முறை முடிவுக்கு வந்தது
கடந்த மாதம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்து பராசினார் நகருக்கு சென்ற பயணிகள் வாக னங்களின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அலிஸாய் மற்றும் பாகன் பழங்குடியினருக்கு இடையே பயங்கர கலவரம் வெடித்தது. 11 நாள் வன்முறைகளில் 133 பேர் பலியாகியுள்ள னர். 177 பேர் படுகாயமடைந்துள்ளனர். தற் போது இரண்டு பிரிவினரின் தலைவர்களின் கூட்டத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சேனல்களை தடைசெய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு
இந்திய சேனல்களை தடை செய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஒளிபரப்பா கும் இந்திய சேனல்கள் அந்நாட்டில் சமூக கலாச்சாரத்தில் பாதிப்புகளை உருவாக்குவ தாகவும் அதனால் இந்திய சேனல்களை ஒளிபரப்ப தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இக்லாஸ் உத்தின் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுக்கள் வர்த்தகத்தை பாதிக்காது - இஸ்ரேல்
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு எங்களுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என இஸ்ரேல் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பரகத் தெரிவித்துள்ளார். இந்தியா முதல் இஸ்ரேலின் ஹபிபா துறைமுகம் வரை மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதாரப் பாதையில் அதிக லாபமடையும் நபராக அதானி உள்ளார். இஸ்ரேலின் ஹபிபா துறைமுகத்தை அதானி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.