டெல்அவிவ்,பிப்.16- இஸ்ரேலின் பொருளாதார போக்கு வரத்திற்கு இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரக மும் உதவி செய்து வருகின்றன. இந்த உதவி இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு ஆதரவான செயல் என கடுமையான விமர்ச னங்கள் எழுந்து வருகின்றன.
இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் செங்கடல் வழியாக பயணிக் கக்கூடிய இஸ்ரேல் மற்றும் அந்நாட்டிற்கு தொடர்புடைய அனைத்து வணிகக் கப்பல்கள் மீதும் ஏமனின் ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் சில கப்பல்களை சிறைப்பிடித்துள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் அமெ ரிக்காவால் தடுத்து நிறுத்த இயலவில்லை. இதற் காக அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கடற்படை கப்பல்களை இணைத்து ஒரு ராணுவக் கூட்டணி அமைத்து ஹவுதி அமைப்பின் ராணுவத்தளங் கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
எனினும் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து சீராகவில்லை. பல கப்பல் நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வரை கடல் வழியாகவும் அமீரகத்தில் இருந்து தரை வழியாகவும் இஸ்ரேலுக்கான பொருளாதார மற்றும் ஆயுத போக்குவரத்து நடைபெறுகிறது. இதனை இந்தியாவிற்கு வருகை புரிந்த இஸ்ரேலின் போக்குவரத்து துறை அமைச்சர் மீரி ரெகேவ் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இந்த போக்குவரத்தை உறுதிப்படுத்தி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போரில் பாலஸ்தீனர்களை படுகொலை செய்ய ஹெர்மஸ்-900 என்ற ட்ரோன்களை இந்தி யாவில் இருந்து அதானி நிறுவனம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளப்பியுள்ளன. ஜி-20 மாநாடு நடைபெற்ற போது அதானி யின் முந்த்ரா துறைமுகம் முதல் இஸ்ரேலில் உள்ள ஹபிபா துறைமுகம் வரை இந்தியா மத்திய கிழக்கு பொருளாதார பாதையை அமெ ரிக்கா உருவாக்கியது. தற்போது இஸ்ரேலின் கடல் போக்குவரத்தும் கிட்டத்தட்ட அந்த பாதையில் தான் நடைபெறுகிறது.