குரங்கம்மை சிகிச்சைக்கு 1.8 கோடி டாலர்கள் தேவை
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை வழங்க 1.85 கோடி அமெரிக்க டாலர்கள் வேண்டும் என ஐ.நா. இடம் பெயர்வு சர்வதேச அமைப்பு கேட்டுள்ளது. இந்த பணத்தின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்நாடு களில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு சிகிச்சை யளிக்கப்படும் என அமைப்பின் இயக்குநர் ஜென ரல் ஏமி போப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அகதிகளாக வறுமையில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க மக்களுக்கு குரங்கம்மை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘அமெரிக்காவின் லாபத்திற்காக நாம் அடித்துக் கொள்வதா?’
அமெரிக்காவின் லாபத்திற்காக நாம் அடித்துக்கொள்ள கூடாது என பெலா ரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென் கோ பேசியுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரில் ஒருவரையொருவர் கொலை செய்து கொள்வது நல்லது என அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். இதைப் புரிந்து விழிப்படைய வேண்டும். மேலும் போரில் நேட்டோ படைகளை ஈடுபடுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
‘லிபிய பணத்தை கொள்ளையடித்த மேற்கு நாடுகள்’
மேற்கு நாடுகள் நேட்டோ ராணுவம் மூலம் 2011 ஆம் ஆண்டு லிபியாவை அழித்துவிட்டன. அந்நாட்டு மக்களுக்கு சொந்தமான 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மான பணத்தை முடக்கி வைத்துள்ளன. இந்த முடக்கப்பட்ட பணத்தின் மூலம் லாபமாக கிடைத்த 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் என்ன ஆனது என தெரியாமலேயே போய்விட்டது என்று ஐ.நா. அவையில் ரஷ்ய பிரதிநிதி பேசியுள்ளார்.
35 நாடுகளுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை
சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 35 நாடு களின் சுற்றுலாப்பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 1 முதல் துவங்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நெருக்க டியில் உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை சரி செய்வதற்கு அந்நாடு சுற்றுலாத்துறையை ஊக்குவித்து வருகிறது. இலங்கையின் மற்ற துறைகளை விட சுற்றுலாத்துறை அதிக வரு மானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சூடான் வெள்ளத்தில் 114 பேர் பலி
சூடான் நாட்டில் பெய்து வரும் கனமழை கார ணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 114 பேர் பலி யாகியுள்ளனர். அந்நாட்டில் பருவ மழை துவங்கி யுள்ள நிலையில் அளவுக்கதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு 27 ஆயிரம் குடும்பங்களும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் முழுமையாக இடிந்து போயுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.