தொடர்ந்து உயரும் வெப்பநிலை பூமியின் எதிர்காலத்திற்கு ஆபத்து
உலகளவில் இரண்டாவது வெப்பமான மாதமாக ஜூலை மாதம் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாத வெப்பநிலை 16.91 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2023 ஆம் ஆண்டு இருந்ததை விட 0.04 டிகிரி செல்சியஸ் குறைவு தான். எனினும் கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதத்தை விட அடுத்த மாதம் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது பூமியின் எதிர்காலத்திற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேட்டோ படைகளுக்கு உதவுகிறது துருக்கி
துருக்கி தொழில்நுட்ப நிறுவனமான எம்ஐஏ டெக்னாலஜி ஏஎஸ் என்ற நிறுவனம் நேட்டோ படைகளுக்கு உதவ உள்ளதாக தெரிய வந்துள் ளது. இந்நிறுவனம் மத்தியக் கிழக்கு கடல் பகு திகளில் உள்ள நேட்டோ போர்க் கப்பல்களுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்க உள்ளதா கக் கூறப்படுகிறது. இது பாலஸ்தீனர்களுக்கு ஆத ரவளிக்க வேண்டும் என போராடி வரும் துருக்கி மக்களுக்கு கோபத்தை தூண்டும் என்பதால், துருக்கி அரசு இஸ்ரேலுக்கு எதிரான இனப்படு கொலை வழக்கில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது.
அமெ.ஆதரவுப் படைகள் மீது சிரிய-அரபு பழங்குடியினர் தாக்குதல்!
சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டெய்ர் எஸோர் கவர்னரேட் பகுதிகளில் அமெரிக் காவின் பண உதவியுடன் செயல்படும் குர்திஷ் படைகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளை சிரிய - அரபு பழங்குடியினர் படை கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா கைப்பற்றியிருந்த அல்-உமர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள்ளும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அதன் கையை விட்டுப் போக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் வியாழக்கிழமையன்று பல பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் 7.1 ஆக பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மியாசாகி கடற் கரையில் இருந்து 32 கி.மீ தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த நிலநடுக்கம் ஹியுகா - நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு
உலக சுகாதார அமைப்பு, காசா பகுதியில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. காசாவில் உள்ள குறைந்தபட்ச நீரிலும் போலியோ உள்ளிட்ட வைரஸ் கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 10 லட் சத்திற்கும் அதிகமான அளவில் போலியோ தடுப்பு மருந்துகள் போட வேண்டிய தேவை உள்ளது. 8 வயதுக்குட்பட்ட 6 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டு சுற்று போலியோ மருந்துகள் போட நாங்கள் தயா ராக உள்ளோம். அதற்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.