மங்காப், ஜூன் 12 - குவைத் நாட்டின் மங்காப் நகரில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கி யிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படு கிறது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமை யலறையில் ஏற்பட்ட தீ, மற்ற தளங் களுக்கும் வேகமாக பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஆறு மாடி கட்டிடம் கேர ளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவரது என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது என வும் அக்கட்டிடத்தில் சுமார் 195 தொழிலா ளர்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவல்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கேரளாவைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 49 தொழிலாளர்கள் உயி ரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் குவைத் தமிழ் சங்கங்களை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்தவர் களின் நிலை குறித்து அறிய தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது என தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர், “குவைத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பற்றிய செய்தியால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரில் சென்றுள்ளார். மேலும் கூடுதல் தக வலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரை வில் பூரண குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.
இது தொடர்பாக சம்பந்தப் பட்ட அனைவருக்கும் இந்திய தூதரகம் முழு உதவியையும் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். உதவி எண்ணாக +965-65505246 தொலைபேசி எண்ணை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.