ஈரானில் அமெரிக்காவிற்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 5 கைதிகளை விடுவிக்க ஈரான் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஈரானில் உள்ள 5 அமெரிக்கக் கைதிகளை (அவர்கள் ஏற்கனவே சி்றைக் காவலிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்) ஈரான் விடுவிக்கும். பதிலுக்கு அமெரிக்கா அதன் பொருளாதாரத் தடைகளை மீறிய வர்கள் என்ற குற்றத்திற்காக கைது செய்து வைத்திருக்கும் 5 ஈரானி யர்களை விடுவிக்கும். அதோடு, 2018ஆம் ஆண்டு டிரம்ப் நிர்வா கத்தால் ஒரு தலைபட்சமாக (அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தி லிருந்து வெளியேறிய போது உலகின் பல பகுதிகளில்) ஈரானின் எண்ணெய் வர்த்தகப் பணத்தை கைப்பற்றியதிலிருந்து 6 பில்லியன் டாலர் பணத்தை மனிதாபிமானச் செலவுகளுக்காக விடுவிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்படி தென்கொரியாவின் சியோலில் உள்ள ஈரானின் பணம் 6 பில்லியன் டாலரை விடுவிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆனால் அந்தப் பணத்தை, உணவு, மருந்து போன்ற மனிதாபிமானச் செலவுகளுக்கு மட்டுமே செல வழிக்க முடியும் என்ற நிபந்தனை யை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவிக்கிறார். இந்தப் பணம் சியோலிலிருந்து கத்தாருக்கு மாற்றப்படும். அங்கிருந்து பணமாக மாற்றப்பட்டு ஈரானுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும். அதன்பிறகு கைதிகள் தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படு வர். கைதிகள் நாடு திரும்ப ஒரு வார மாகலாம் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓராண்டுக்கு ஈரான் சிரியா விலோ இராக்கிலோ அமெரிக்கப் படைகளுக்கு எதிராக உள்ள படை களுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்பதும் அந்த ஒப்பந்தத் தில் அடங்கும் என்கிறது என்பிசி. ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசி எம்எஸ்என்பிசி தொலைக்காட்சி யின் பிரத்யேக நேர்காணலில், அந்தப் பணம் ஈரான் நாட்டின் பணம். அதை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதை ஈரானிய மக்க ளும், ஈரானிய அரசும் முடிவு செய் வோம் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 150 பில்லியன் டாலர் அளவிற்கு ஈரானின் சொத்துகள் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுள்ளன.