இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது.
காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீதும் தாக்குதலை நடத்தியது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ஈரான் ராணுவ கமாண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிரட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்றும் மத்திய கிழக்கில் உள்ள தங்களது ராணுவ தளங்கள், இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவும் ஏவுகணைகளை தடுத்து வீழ்த்த வேண்டும் என்றும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.