ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஒன்று வியாழனன்று ஈரான் கடலில் மூழ்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் அஸ்ஸலுயே துறைமுகத்திலிருந்து 30 மைல் தொலைவில் கப்பல் ஒன்று மோசமான வானிலை காரணமாக இன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் 30 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரான் வானிலை மையம் தெரிவிக்கையில், நேற்று முதல் பாரசீக முதல் வளைகுடா பகுதியில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவித்தனர். இந்த மோசமான வானிலையே கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்று கூறினர்.
மேலும் கப்பலில் இருந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.