world

img

காசா மருத்துவமனை மீது குண்டுவீசிய இஸ்ரேல் குழந்தைகள், பெண்கள் 1000 பேர் பலி

டெல் அவிவ், அக். 18 - பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கு எதிராக உலகம் முழு வதும் போராட்டங்களும் அலை அலையாக எழத் துவங்கியுள்ளன. ஆனால், அவற்றை பொருட் படுத்தாமல் பாலஸ்தீனம் மீது கண்மூடித்தனமான தாக்கு தலை தொடுத்துள்ள இஸ்ரேல், செவ்வாயன்று இரவு காசா மருத்து வமனை மீது ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தி 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள்  உட்பட 1000-க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது. சர்வதேச யுத்த விதிமுறை களை மீறி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், இந்த  தாக்குதலுக்கு உலக நாடுகள் பல வும் தங்களின் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. காசாவின் பாப்டிஸ்ட் பகுதி யில் அல்-அஹில் என்ற மருத்துவ மனையின் மீது இஸ்ரேல் ராணு வம் இந்த குண்டு வீச்சை நடத்திய சில மணி நேரத்திலேயே 500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழ ந்ததாக கூறப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் துவங்கியதில் இருந்து இஸ்ரேல் ராணுவம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் மிக வும் சக்தி வாய்ந்த மற்றும் தடை செய்யப்பட்ட விஷ குண்டுகளை பயன்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் இது வரை 3 ஆயிரத்து 200 பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டு உள்ள தாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்து ள்ளதாகவும் காசா சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக தெரி வித்துள்ளது.

பாலஸ்தீனம் 3 நாட்கள் துக்கம்

இஸ்ரேலின் இந்த கொடூர மான தாக்குதலுக்கு உலகம் முழு வதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், மூன்று நாட்களை துக்க நாளாக அறிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, “அப்பாவி பாலஸ்தீனர்கள் இருந்த மருத்துவமனை மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் செயல்பாடுகளால் உருவாகும் தீ, உங்கள் யூத மதவெறியை சூழ்ந்து விடும்” என்று கடுமை யாக எச்சரித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு “இது ஒரு இனப்படுகொலை” என ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நாசர் கனி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல் 

“காசாவில் உள்ள அல்- அஹில் மருத்துவமனையில் ஏற்பட்ட உயிர் இழப்பு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு எங்களது ஆழ்ந்த இர ங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரா ர்த்திக்கிறோம்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார். “நடந்து வரும் போரில் பொதுமக்கள் உயிரிழப்பது, தீவிரமான மற்றும் தொடர்ச்சி யான கவலைக்குரிய விஷயமா கும். இதற்கு காரணமானவர்கள்  பொறுப்பேற்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி பட்டும்  படாமல் இஸ்ரேலைக் கண்டித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் தூதரகங்கள் முற்றுகை

இஸ்ரேலின் குண்டுவீச்சை தொடர்ந்து பல நாடுகளில் மீண்டும் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் வெடித்துள்ளது. ஜோர்டான், துருக்கி, லெபனான், ஈராக், துனிசியா ஆகிய நாடு களின் தலைநகரங்களில் மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். ஜோர்டானில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள் மீது கற்களை வீசியும் இஸ்ரேல் தூதரகத்தின் தரைத்தளத்தில் தீ வைத்தும் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரி வித்தனர். துருக்கி மக்கள் மிகுந்த ஆவேசத்துடன் தங்கள் நாட்டில் உள்ள நேட்டோ ராணுவ தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

வெள்ளை மாளிகை முன்பு  அமெரிக்கர்கள் போராட்டம்


இஸ்ரேலின் குண்டு வீச்சை கண்டித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்கர்கள் போராட்டம் நடத்தினர். “பைடன் பணம் தரு கிறார்; இஸ்ரேல் பாலஸ்தீன மருத்து வமனைகளின் மீது குண்டுவீசு கிறது” எனவும் அமெரிக்கா ஆண்டு தோறும் இஸ்ரேலுக்கு 380 கோடி அமெரிக்க டாலர் களை ஆயுதங்களுக்காக நிதி யுதவி அளித்து வருகிறது. மேலும் தற்போது பாலஸ்தீனம் மீது போர் தொடுக்க 1000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளிக் கொடுத்துள்ளது என்ற தங்களின் குற்றச்சாட்டை நியூயார்க் நகரின் கட்டடங்களின் டிஜிட்டல் விளம்பர பலகைகளில் ஒளி பரப்பி, அமெரிக்காவின் செயலை கண்டித்தனர்.

பழியை ஹமாஸ் மீது போடும் இஸ்ரேல்

மறுபுறத்தில், ஹமாஸ் குழுவினர் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அடியில் பங்க்கர்களில் தங்கி யுள்ளதாகவும் அதற்காகத்தான் இஸ்ரேல் அங்கு குண்டு வீசுகிறது என்றும் தங்களின் கொலை களுக்கு நியாயம் கற்பிக்கும்  வகையில் பொய் பிரச்சாரங் களை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால், யார் குண்டு வீசியது உண்மையை நிரூ பிக்க செயற்கைக்கோள் படத்தை வெளியிடவேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.  ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி  நிறுவனம் அல்-அஹில் மருத்துவ மனை மீது வீசப்பட்ட குண்டு அமெ ரிக்காவின் தயாரிப்பான MK-84 ரகத்தை சேர்ந்தது என செய்தி வெளியிட்டுள்ளது.  இதுவரை காசாவில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களின் மீதும் 23 மருத்துவமனைகளின் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசியுள்ளது குறிப் பிடத்தக்கது. 

அமைச்சரின் கொலைவெறி

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச் சர்  இடாமர் பென் ஜிவிர் காசா விற்குள் கொண்டு செல்ல வேண்டியது  நூற்றுக்கணக்கான டன்  வெடிமருந்துகள், ஒரு கிராம் மனிதாபிமான உதவி கூட அல்ல என்று கொலை வெறியோடு பேசியுள்ளார்.