அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் 19 ஆவது நாளாக தொடர் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுவரை பாலஸ்தீனர்கள் 17,439 மக்கள் படுகாயமடைந்துள்ளனர். 6,546 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் 2,704, பெண்கள் 1,584 பேர் அடங்குவர். மேலும் 870 குழந்தைகள் உட்பட சுமார் 1,550 பேர் இன்னும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். போரில் 70 சதவீதம் வரை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.