காசா,அக்,15- அக்டோபர் 7 அன்று காசா மீது போரை அறிவித்து வான்வழி தாக்கு தலை துவங்கிய இஸ்ரேல் ராணுவம் முதல் 6 நாட்களில் மட்டும் 6000 குண்டு களை அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது வீசியுள்ளது.இந்த எண்ணிக்கை ஆப்கா னிஸ்தானில் அமெரிக்கா ஆண்டு முழு வதும் வீசிய எண்ணிக்கையை விட மிக அதிகம் என கூறப்படுகிறது. வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து காசாவின் வடக்கு பகுதியில் தரை வழித் தாக்குதலை தொடுக்கப் போவ தாகவும், உயிரோடு இருக்க வேண்டும் என்றால் தெற்கு பகுதிக்கு சென்று விடுங்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் மிரட்டி வந்தது. வடக்குப் பகுதியில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக வெளியேற்று வது சாத்தியமற்றது என ஐநா கண்ட னம் தெரிவித்த போதிலும் பின்வாங்கா மல் தொடர்ந்து மிரட்டியதால் தெற்கு பகுதிக்கு மக்கள் இடம் பெயர துவங்கிய போது அவர்களின் வாகனங்கள் மீதே குண்டுகளை வீசி பலரைப் படுகொ லை செய்தது இஸ்ரேல் ராணுவம். உணவு,குடிநீர் இல்லாமல் மூன்று நாட்கள் மனிதாபிமானமற்ற முறையில் போர் துவங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு காசா பகுதிக்கு மின்சாரம், குடிநீர், உணவு, மருந்து பொருட்கள் என அனைத்தையும் இஸ்ரேல் அரசு தடுத்து நிறுத்தியது. மக்களையும் வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்து விட்டு,உதவ முன்வரும் நாடுகளின் நிவாரணப்பொருட்களையும் காசா விற்குள் செல்லவிடாமல் தடுத்து வைத்துள்ளது. நான்கு நாட்களுக்கு மேலாக உணவு, குடிநீர்,மின்சாரம் எதுவும் இல்லாமல் பாலஸ்தீன மக்கள் உள்ளனர்.போரால் சிதைந்து போன வீடுகளின் குப்பைகளில் கிடக்கும் உணவு பொருட்களை எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.மேலும் அப்பகுதிகளில் இருந்த பேக்கரிகளில் இருந்த குழந்தைகளுக்கான பிரட்களும் தற்போது முற்றிலும் காலியாகிவிட்டதாக காசாவில் உள்ள ஊடகத்தினர் தெரிவித்துள்ளனர்.