world

img

மீண்டெழுகிறது வியட்நாம் பொருளாதாரம்

ஹனோய், டிச. 6 கோவிட் 19 தொற்றால் பாதிப்பை சந்தித்த வியட்நாமின் பொருளாதாரம் மிண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சர்வதேச நிதியத்தின்(ஐ.எம்.எப்) தென் கிழக்கு ஆசியப் பிரதிநிதி பிரான்கோயிஸ் பைன்சாட் தெரிவித்துள் ளார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடை பெற்ற வியட்நாம் பொருளாதார அமைப்பு-2021 மாநாட்டில் பேசுகையி லேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது பற்றி மேலும் பேசிய அவர், “இந்த பொரு ளாதார மீட்சி நான்காவது காலாண்டில் துவங்கியிருக்கிறது. நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 விழுக்கா டாகவும், 2022 ஆம் ஆண்டில் 6.6 விழுக் காடாகவும் இருக்கும். மருத்துவ நலனை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். பொருளாதார மீட்சிக்கு அது முக்கியமான காரணியாக அமையும்” என்றார். மக்களில் எந்தப் பிரிவினருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களைக் குறி வைத்து வியட்நாம் அரசு பல்வேறு திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கச் செய்வதற்காக அவர்களுக் கான நலத்திட்டங்களை மாற்றி அமைத்தும் வருகிறார்கள். நீண்டகால ஆதரவு அவர்க ளுக்குக் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டங்களில் மாற்றங்கள் இருக்கும். இதை யும் பிரான்கோயிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இது பற்றி மேலும் பல ஆலோசனை கள் அவர் தெரிவித்துள்ளார். மிகவும்  மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களு க்கு வியட்நாம் அரசு சில குறிப்பான திட்டங்க ளை நடைமுறைப்படுத்தி வருகிறது.  

இதைப் பாராட்டிய அவர், இத்தகைய செயல்பாடுகள் தற்காலிகமாக இருந்தா லும், முழு அடைப்பிலிருந்து நாடு வெளியேறி வரும் நிலையில் இவை மிகவும் அவசியமானவையாகும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இந்த உதவிகள் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை யிழப்புகள் தொற்றுக் காலத்தில் ஏற்பட்டன. இதைச்சுட்டிக்காட்டிய பிரான்கோ யிஸ், வியட்நாம் தனது இலக்குகளை அடைவது ஒன்றும் கடினமானதல்ல என்று குறிப்பிட்டார்.  இதில் பேசிய வியட்நாம் பொருளியல் மையத்தின் இயக்குநர் குவாங் துவான், “பொருளாதார மீட்சி மற்றும் தொடர் வளர்ச்சிக்கான திட்டங்களை வியட்நாம் செயல்படுத்துகிறது. சில தடைகள் இருந்தா லும் பெரிய ஆதரவை எதிர்பார்த்து நிறுவ னங்கள் காத்திருக்கின்றன. வட்டி விகிதம், மருத்துவத்துறையில் அரசு முதலீடு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி,  பொதுவான அரசு முதலீடு உள்ளிட்ட வற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.