world

img

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிரந்தரத் தடை

கீவ், ஜூலை 8- ரஷ்யாவுடனான மோதலைக் காரணம் காட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைத் தடை செய்து செலன்ஸ்கி நிர்வாகம் தனது கோர முகத்தை வெளிக்காட்டியுள்ளது. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தும் ஃபார் லைப் கட்சி, இடதுசாரிகளின் ஒன்றியம், உக்ரைன் சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தடை செய்யும் ஆணையை மே 13 ஆம் தேதியன்று பிறப்பித் தார். இவையனைத்தும் ரஷ்ய ஆதரவு அமைப்பு கள் என்ற முத்திரையையும் குத்தி நீதிமன்றங் களுக்கும் அரசுத்தரப்பில் அழுத்தம் தரப் பட்டது. இந்த அழுத்தத்தால் தற்போது உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. கட்சிக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிதி அனைத்தையும் அரசு எடுத்துக் கொள்ளவிருக்கிறது. உக்ரைனின் கிழக்குப்பகுதியில் பல்வேறு வன்முறை வெறியாட்டங்களை நடத்திய வலது சாரிக் கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி மீதான நடவடிக்கை திடீரென்று எடுக்கப்பட்டது இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளாகவே தடை செய்வதற்கான முயற்சிகளை செலன்ஸ்கி உள்ளிட்டவர்கள் மேற்கொண்டு வந்தனர். தற்போது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைக் காரணம் காட்டி தடை செய்து விட்டார்கள். தனது சின்னத்தைப் பயன்படுத்துவதில் இருந்து, கட்சி சார்பிலான எந்தவித இயக்கத்தையும் எடுக்க இந்தத் தடை அனுமதி தராது.

மக்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்து வந்தநிலையில்தான் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு பல்வேறு கார ணங்களைக் காட்டி கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நிற்க முடியாமல் செய்துவிட்டார்கள்.  2012 ஆம்  ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 26 லட்சம் வாக்குகளைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. கிழக்குப் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று கோரியதை தேச விரோதம் என குற்றம் சாட்டியுள்ளனர். அலெக்சாண்டர் மற்றும் மிக்கேல் கோனோ னோவிக் ஆகிய இரண்டு இளம் கம்யூனிஸ்டு சகோதரத் தலைவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாவட்ட நிர்வாகங்களைக் கைப்பற்ற அவர்கள் சதித்தீட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அது  எந்த இரண்டு மாவட்டங்கள் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மக்கள் கிண்ட லடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் செலன்ஸ்கி அரசு மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று  இந்த  இரண்டு சகோதரர்களும்  கோரிக்கை விடுத் திருந்தனர்.