லண்டன், ஜன.29- கொரோனா கட்டுப்பாடு களை மீறி விருந்தில் கலந்து கொண்டதற்காக பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் பிரதமரை வலியுறுத்திப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் டவுனிங் தெருவில் உள்ள தோட்டம் ஒன்றில் நடந்த விருந்தில் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டிருந்தார். இந்த செய்தி தாமதமாகவே அம்பலமாகியது. இருந்தா லும், அக்கால கட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. அதை போரிஸ் ஜான்சன் மீறி யிருந்திருக்கிறார். சொந்த அரசாங்கத்தின் கட்டுப்பாடு களையே பிரதமர் மீறியிருப்ப தால் அவர் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கொரோனா கட்டுப்பாடு களை மீறியது மட்டுமல்ல, ஏற்கனவே அவர் மீது பல் வேறு குற்றச்சாட்டுகள் இருந் தன. கொரோனாவைக் கட் டுப்படுத்துவதற்கான பல் வேறு பணிகளை ஒப்பந்ததா ரர்களுக்கு அளித்ததில் ஊழல் நடந்ததாகவும், தனது டவு னிங் தெரு அடுக்குமாடி குடி யிருப்பை கட்சியின் நன் கொடையாளர் ஒருவர் மூலமாக அழகுபடுத்திய தாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தொழிலாளர் கட்சி உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிட் டன் பிரதமர் போரிஸ் ஜான்ச னைக் கடுமையாக விமர் சித்து வருகின்றன. சொந்தக் கட்சியிலும் அவர் மீது அதி ருப்திக் குரல்கள் எழுந்துள் ளன. குறிப்பாக, முன்னாள் பிரதமர் தெரசா மே, போரிஸ் ஜான்சனைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், “யார் விதிகளை உருவாக்கு கிறார்களோ, அவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும்.
யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. கொரோனா விதிமுறை களைப் பிரதமர் பின்பற்ற வில்லை என்று கேட்டவுடன், மற்றவர்களைப் போல எனக் கும் கோபம் வந்தது.” என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவ ரான கீர் ஸ்டார்மெர், “லட்சக்க ணக்கான மக்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சொந்த விதி களையே மீறி, தங்கள் இஷ் டத்திற்கு அரசில் உள்ளவர் கள் செலவழித்துக் கொண்டி ருக்கிறார்கள். போரிஸ் ஜான் சன் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.” என்று கோரியுள்ளார். தான் தவறு செய்யவில்லை என்றும், இருந்தாலும் நடந்ததற்கு பிரிட்டன் மக்களிடம் மன் னிப்பு கேட்பதாகவும் ஜான் சன் கூறியுள்ளார்.
சிரியாவிலிருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளும் தங்கள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவும், ஈரானும் வலியுறுத்தியுள்ளன. நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையிலேயே இரு நாடுகளும் இவ்வாறு கோரியிருக்கின்றன. வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைவரின் கண்களையும் திறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனை முன்னிறுத்தி ரஷ்யாவுடனான மோதல் போக்கை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. அமெரிக்காவும், பிரிட்டனும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை உக்ரைன் தலையில் கட்டி வருகின்றன. இந்நிலையில் மற்றொரு கூட்டாளி நாடான ஜெர்மனி, ஆயுத விற்பனை செய்ய மறுத்துவிட்டது. அதோடு, அமெரிக்காவும், பிரிட்டனும் ஆயுதங்களை விற்பனை செய்வதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான உறவு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தில் 12 ஆவது பெரிய நாடாக வியட்நாம் உருவெடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதியில் 23 விழுக்காடும், இறக்குமதியில் 70 விழுக்காடும் அதிகரித்துள்ளன. கோவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்பையும் மீறி வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள வியட்நாம் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.