கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி மற்றும் கூகுள் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு திறனை வளர்க்க ஸ்டார்டப் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.