world

அதிருப்தியாளர்களுக்குக் குறிவைக்கிறது சவூதி

ரியாத், நவ.3- அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் அதிருப்தியாளர்களை இஸ்ரேல் உதவியுடன் சவூதி அரேபியா குறிவைத்துள்ளது. இஸ்ரேலிய மென்பொருளைக் கொண்டு உளவு பார்த்த விவகாரம் உலகம் முழுவதும் வெடித்து பலரின் பதவிகள் பறிபோயின. அரசாங்கங்களுக்கு மட்டும்தான் அவற்றைத் தந்தோம் என்ற வாதமும் தகர்ந்தது. ஆனால்,  இஸ்ரேலிய மென்பொருட்களை சதி வேலை களுக்குப் பயன்படுத்துவது தொடர்கிறது. தற்போது சவூதி அரேபியா அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. பொதுவாக, ராணுவத்தினர் பயன்படுத்து வது போன்றதொரு மென்பொருளை இஸ்ரேலிடமிருந்து சவூதி அரேபியா வாங்கி யிருக்கிறது. அதைக்கொண்டு அமெரிக்காவில் வசித்து வரும் எதிர்ப்பாளர்களை உளவு பார்க்கிறார்கள். அந்த மென்பொருள் தரும் தகவல்களை அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாக மாற்றுவது அடுத்த கட்ட மாகும். இந்த எதிர்ப்பாளர்கள் சவூதி அரேபியா வுக்கு பயணம் செய்யும்போது சாட்சியங்களை வைத்து அவர்களை சிறைப்படுத்துவது, கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை அடுத்தடுத்த கட்டங்களாகும். இந்தத் தகவல்கள் அசோசியேட்டட் பிரஸ் ஊடகக்குழு மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு களாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதன்முறை யாக, இத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்ட தற்கு ஆதாரப்பூர்வமாக சவூதி அரேபிய அரசு சிக்கியிருக்கிறது. இதை ‘‘நாடு தாண்டிய ஒடுக்குமுறை’’ என்று ஆய்வாளர்கள் வர்ணிக்  கிறார்கள்.