world

img

“நாங்கள் சிங்கங்கள்” இஸ்ரேலியப் படைகளை விரட்டியடித்த போராளிகள்

ரமல்லா, அக்.29- தனது ராணுவத்தின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் லயன்ஸ் டென் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை வேட்டை யாடும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியுற்றது என்று பாலஸ்தீன எதிர்ப்புக்குழு தெரிவித்துள்ளது. மேற்குக் கரைப்பகுதியில் இஸ்ரேல் ராணு வம் தொடர்ந்து சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகள் குறித்த செய்தி கள் அனைத்தையும் உலகிற்கு இஸ்ரேலிய ஊட கங்களே தந்து வருகின்றன. இந்த செய்தி களை மேற்கத்திய ஊடகங்களும் அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதி கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுப்பதாக  மட்டும் செய்திகள் வெளியாகின்றன. கடந்த வாரத்தில் நேபுளஸ் நகரில் ஐந்து பேர் கொல்லப்பட்ட செய்தியும் வந்திருக்கிறது. இந்த செய்திகள் குறித்து பாலஸ்தீன எதிர்ப்புக் குழுவான லயன்ஸ் டென்(சிங்கங்களின் குகை)  என்ற அமைப்பு சில வினாக்களை எழுப்பி யுள்ளது. அதோடு நிற்காமல், ஒட்டுமொத்த நடவ டிக்கையை காட்சிப்படுத்த முடியுமா என்று கேட்டுவிட்டு, அதை உங்களால் செய்ய முடி யாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

தங்கள் அமைப்பைக் குறிவைத்தே இந்த ராணுவத் தாக்கு தல்கள் நடைபெற்றது என்றும், திட்டமிட்ட எதிர்த் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேலிய ராணுவத்தை விரட்டியடித்தோம் என்று அந்தக்குழு தெரி வித்துள்ளது. இது குறித்து அந்தக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபுளஸ் நகரில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது நகருக்கு வெளியில் உள்ள எங்கள் லயன்ஸ் டென் போராளிகள் இஸ்ரேல் சிறப்புப் படைகள் எங்கிருக்கின்றன என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.

குழுவின் தலை வர்கள் போராளிகளைத் திரட்டுவது என்று முடிவு செய்தனர். அதோடு, இஸ்ரேலிய ராணு வத்தினரை நகருக்குள் இழுக்கும் வேலையை யும் செய்தார்கள். பல்வேறு முனைகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல்கள் நடந்தன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “இஸ்ரேலின் சிறப்புப்படைப் பிரிவு ஒடுக்கப்பட்டது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குண்டுகளிலும் அவர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னால் வந்த ராணுவப் பிரிவினருக்கு, சிறப்புப் படைப் பிரி வினரை மீட்பதே வேலையாகி விட்டது.  லயன்ஸ் டென் தலைவர்களைப் பிடிக்கும் நோக்கத்துடன் வந்த அவர்கள் வெறுங்கையோடு திரும்ப வேண்டிய கட்டாயம் வந்தது” என்று தெரிவித்துள் ளார்கள்.  இந்தப் புதிய குழுவை இஸ்ரேல் சாதாரண மாக எடை போடவில்லை. இவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்குக் கூட “அலையை உடைப்போம்” என்றுதான் இஸ்ரேல் ராணுவம் பெயர் வைத்தது. ஆனால், அலை ராணுவத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது என்று லயன்ஸ் டென் கூறுகிறது. 

யார் இந்த லயன்ஸ் டென்?

இஸ்ரேலின் அட்டூழியங்களை எதிர்க்கும் பல குழுக்களில் உள்ள இளைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். ஃபடா, ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்தப்புதிய லயன்ஸ் டென் அமைப்பின் நிறுவ னர்களாவர். இந்த அமைப்பில் இருப்பவர்கள் அனைவருமே வயதில் 20களின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவே காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் ஆயுதங்களை வைத்திருந்த தற்காக பாலஸ்தீன சிறைகளில் இருந்தவர்க ளாவர். தங்கள் எதிர்ப்பு இஸ்ரேல் ராணுவத்தை நோக்கியே இருக்கும் என்றும், பாலஸ்தீன நிர்வா கத்திற்கு எதிரானது அல்ல என்றும் கூறியிருக்கி றார்கள். சில இஸ்ரேலிய ராணுவ வீரர்களை இந்த அமைப்பினர் சுட்டுக் கொன்றுள்ளதால், மக்கள் மத்தியிலும் நம்பிக்கையைப் பெற்றி ருக்கிறார்கள். அனைத்து அமைப்பினரையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.