world

img

விவசாய மானியத்தை விட முடியுமா?

உலகின் பல முதலாளித்துவ நாடுகளில் பணவீக்கமும் தொழில் மந்தமும் சேர்ந்து தேக்கமும் பணவீக்கமும் இணைந்து காணப்படும் நிலை உள்ளது . உலகம் முழுவதும் இது பசி பஞ்சம் வறுமையை அதிகரிக்கிறது. இந்நிலையில், உலக வர்த்தக ஸ்தாபனம் றுகூடீ உயர் நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 13-இல் (இன்று) ஜெனிவாவில் கூடுகிறது. 60 நாடுகள், இந்தியா உள்பட இக் கூட்டத்தில் பங்கேற்கும்.

விவசாய மானியம் கணக்கிடும் முறை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நாடுகள் முன்வைக்கின்றன .சென்ற ஆண்டு இந்திய பிரதிநிதி பியூஸ் கோயல், விவசாய மானியம் கணக்கிடும் முறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளது என வாதிட்டார். இந்தியா ஜி 33 என்ற முப்பத்தி மூன்று நாடுகளின் குழுவில் ஒரு அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பு நாடு . சீனா, பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா போன்ற பல வளரும் நாடுகள் இக்குழுவில் உள்ளன. 1986 -88 விலைவாசி அடிப்படையிலேயே பணவீக்கத்தை உலக வர்த்தக அமைப்பு கணக்கிடுகிறது. அடிப்படை ஆண்டு மாற்றப்படவில்லை. இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதை கொள்முதல் செய்து இருப்பு வைத்து, விரிவான பொதுவிநியோக முறை இந்தியாவில் உள்ளது. இந்திய மக்களுக்கு உணவு சப்ளைக்காக உணவு தானியங்களை அரசு இருப்பு வைப்பதை உணவு பதுக்கல் எனக் கூறுகிறது, உலக வர்த்தக அமைப்பின் வளர்ந்த நாடுகள் விவசாயத்திற்கு ஏராளமாக மானியம் அளிக்கின்றன. நம் நாட்டில் கொடுக்கப்படும் மானியம் மட்டும் றுகூடீ-ன் கண்களை உறுத்துகிறது .நாம் மானியங்களை குறைக்க வேண்டுமாம்! அதன் விதிப்படி மொத்த தானிய உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மட்டுமே மானியம் கொடுக்கலாமாம்!