world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலியில்  வீசும் வெப்பக் காற்று 

இத்தாலியில் 12 நகரங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து வீசும் வெப்பக் காற்று தெற்கு ஐரோப்பா விற்குள் நுழைகிறது. இந்த வெப்பக் காற்றலை கிட்டத்தட்ட  40 டிகிரி செல்சி யஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பத்துடன்  வீசி வருவதாக இத் தாலி சுகாதார அமைச்சகம் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த காற்றலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் சுற்றுலா பயணிகளும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதிகளில்  இஸ்ரேல் தொடர் தாக்குதல் 

காசாவில் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்கு தல்களை நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களில் சுமார் 6 ஐ.நா  பள்ளிக் கூடங்களில் தங்கி இருந்த பாலஸ்தீனர் கள் மீது குண்டு வீசி கொலை செய்துள் ளது. ஜூலை 7 புதனன்று ஐநா பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெறும் 1 மணி நேரத்தில் 42 பாலஸ்தீனர்களை படுகொலை  செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.  

 மாணவர்கள் போராட்டம்:   கலவரமாக மாற்றிய வங்க அரசு 

வங்கதேச மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை அந் நாட்டு அரசு கலவரமாக மாற்றியுள்ளது. வங்க அரசு பணி களில் நிலவும் ஒருதலைப்பட்சமான இட ஒது க்கீட்டை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் கடு மையாகப் போராடி வருகின்றனர். போராடி வரும் மாணவர்கள் மீது வங்கதேச காவல்துறை மற்றும் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவு  சத்ரா லீக், தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலவரமாக மாற்றியுள்ளனர். இதில் 6 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியா கியுள்ளனர். 100 க்கும் மேற்பட்ட படுகாயமடைந்துள்ளனர்.  

இம்ரான் கட்சிக்கு தடை  ஆளும் கூட்டணி அதிருப்தி 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை தடை செய்ய  உள்ளதாக அந்நாட்டு அரசு அறி வித்திருந்தது. இந்த தடைக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள் ளன.   கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் இந்த தடை அறிவிப்பிற்கு முன், எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என  குறிப்பிட்டுள்ளார். 

மனிதநேய நெருக்கடி  சூடானில் மோசமாகியுள்ளது 

சூடானில் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்து வரு வதால், அந்நாட்டில் மனித நேய நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது என்று ஐ.நா. கவலை தெரி வித்துள்ளது. ஐ.நா மனித நேய உதவி அமைப்பின் பணி, பாதுகாப்பு நிலைமை தொ டர்ந்து மோசமாகி வருகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறைப் பிரச்ச னையும் உருவாகியுள்ளது. 2024 ஐ.நாவின் சூடான் மனித நேய பணிக்கான திட்டத்துக்கு 270 கோடி  டாலர்கள் தேவை. ஆனால், 82 கோடி டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.