ஒட்டாவா, ஜூன் 20- ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு பயங்கரவாத அமைப் பாக பட்டியலிடப் போவதாக கனடா அரசு அறிவித்துள் ளது. கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஈரான் புரட்சிகர காவல் படையின் செயல்பாடு களின் அடிப்படையில், அப்படை தெரிந்தே ஒரு பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டது, பயங்கரவாத நடவடிக்கையை செயல்படுத்த முயற்சித் தது, பயங்கரவாத நடவடிக்கையில் பங்கேற்றது என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இதன் காரணமாக அவர்களை பயங்கர வாதக்குழுக்களாக வகைப்படுத்துகிறோம் என தெரி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஈரானின் புரட்சிகர காவல் படை “பயங்கரவாத குழு” என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த வாரம் முதல் அமலாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது.