world

img

இளம் புரட்சியாளர் எம்.என்.குப்தா!

ச ுதந்திரப் போராட்ட வீரரும், எழுத்தாளருமான மன்மத் நாத் குப்தா (எம்.என்.குப்தா) 1908 பிப்.7 அன்று வாரணாசியில் பிறந்தார். 1922 இல் தனது 14-வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், ராம்பிரசாத் பிஸ்மிலால் ஈர்க்கப்பட்ட இவர், காங்கிரசிலிருந்து விலகி இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தில் சேர்ந்தார். 1925 ஆக.9 அன்று இவர், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பாக் உல்லாகான், சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்டோருடன் இணைந்து, ககோரி ரயிலை நிறுத்தி கொள்ளையடித்தனர். இதில் ஏற்பட்ட தகராறின்போது, மன்மத் துப்பாக்கியால் சுட்டதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மன்மத், சிறுவன் என்பதால் அவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை யும், மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

1937-இல் விடுதலையான மன்மத், ஆங்கிலேய அரசுக்கு எதிராக நூல்களை எழுதத் தொடங்கினார். இதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்பு 1946 இல் விடுதலை செய்யப்பட்டார். இவர், இந்தி, ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளில் 120 புத்தகங்களை எழுதியுள்ளார். They Lived Dangerously என்ற தனது புத்தகத்தில், புரட்சியாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எதிர்கொண்ட சவால்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகளை விவரித்துள்ளார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி, அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 92 வயதில் 2000 அக்.26 அன்று புதுதில்லியில் காலமானார்.