வாஷிங்டன், பிப்.16- உட்கட்சிப் பூசலால் நடப்பாண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடும் என்று ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவினர் கலக்கமடைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜோ பைடன் மேற் கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜன நாயகக் கட்சிக்குள் பெரும் கருத்து வேறு பாடுகள் எழுந்துள்ளன. தங்கள் கருத்துக் களை வெளிப்படையாகவே கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அவருடைய செயல்பாடுகளை ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். மக்கள் மத்தி யிலும் அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி நிலவுகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி அமெரிக்க மக்களில் கிட்டதட்ட 50 விழுக்காட்டினர் ஜோ பைடனின் நிர்வாகம் மீது அதி ருப்தி தெரிவித்துள்ளனர். ஜோ பைட னின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டு முகாம்களில் இல்லாத தலை வர்கள் உட்கட்சி மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலி யுறுத்தி வருகின்றனர்.
நவம்பர் மாதத் தில் கட்டமைப்புத் துறையில் மேற்கொள் ளப்பட்ட ஒரு லட்சம் கோடி டாலர் என்பது முக்கியமான சாதனையாகும் என்று சுட்டிக்காட்டும் அந்தத் தலைவர்கள், அதை மக்களிடம் கொண்டு செல்லா மல் குறைகளைப் பற்றி அதிகம் பேசுவது தவறு என்கின்றனர். குறிப்பாக மிச்சிகன் மாகாணத் தைச் சேர்ந்த எலசா ஸ்லாட்கின், விர்ஜி னியாவைச் சேர்ந்த அபிகய்ல் ஸ்பான் பெர்கர் மற்றும் அயோவாவின் சின்டி ஆக்சின் ஆகிய ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வரு கின்றனர். ஏதோ தலைநகர் வாஷிங் டனே உடைந்து நிலைகுலைந்து போய் நிற்பது போன்ற தோற்றத்தை ஜனநாய கக் கட்சியின் உட்பூசல் உருவாக்கி யுள்ளது என்று அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். அமெரிக்க செனட் அவையில் குடி யரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் சரி பாதி இடங்களை வைத்துள்ளன. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 222 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 212 இடங்களும் உள்ளன. நவம்பரில் நடைபெறப் போகும் தேர்த லில் இந்த நிலை மாறி, இரு அவைகளி லும் எதிரான சூழல் உருவாகி விடலாம் என்று கருத்துக் கணிப்புகளும் தெரி விக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களில் 28 விழுக்காட்டி னரே, அரசின் செயல்பாடுகள் போது மான அளவில் இல்லை என்று கூறி யுள்ளனர்.