world

img

பெரு மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு அமல் 

பெரு நாட்டில் விலைவாசி உயர்வைக்கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
பெரு நாட்டில் தொடர்ந்து எரிபொருட்கள், உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் தலைநகர் லிமாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வர பெரு குடியரசுத்தலைவர் பெட்ரோகாஸ்டில்லோ இன்று தலைநகரில் ஊரடங்கை அறிந்துள்ளார். இதனால் பெரு நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.