world

img

சகோதரத்துவம் - ஒத்துழைப்பு கியூபா-வெனிசுலா அறைகூவல்

காரகஸ், மே 11- கியூபா, வெனிசுலா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் கியூபாவின் பிரதமராக மார்ரிரோ குருஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, முதன்முறையாக வெனிசுலாவுக்கு அதிகாரப்பூர்வமான பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அகற்றும் அமெரிக்க முயற்சிகள் தோல்விகளைச் சந்தித்துள்ளன. இரு நாடுகளும்  அமெரிக்காவின் சதி வேலைகளுக்குத் தொடர்ந்து இலக்குகளாக இருந்து வரும் நிலையில் இந்தப் பயணம் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.  தனது பயணத்தின் நோக்கத்தை மிகவும் தெளி வாகவே மார்ரிரோ குருஸ் அறிவித்துள்ளார்.

“எங்கள் இரு  நாடுகளும் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளன. இந்த முற்று கையால் கொடுமையான விளைவுகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். இருவரும் இணைந்து பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்விலும் எந்தெந்தப் பகுதியில் முன்னேற்றம் காண முடியும் என்று விவாதிக்கிறோம். பரஸ்பர ஒத்து ழைப்பில் அடித்தளத்தை மறு கட்டுமானம் செய்யும் நிலை யை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று குருஸ் குறிப்பிட்டார். வெனிசுலாவின் தலைநகர் காரகசில் உள்ள ஜனாதி பதி அலுவலகத்தில் நிகோலஸ் மதுரோவை மார்ரிரோ குருஸ் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய நிகோலஸ் மதுரோ, “வரலாற்று ரீதியாக ஏற்கனவே நிகழ்ந்து வரும்  ஒத்துழைப்புப் பணிகளை நாங்கள் பரிசீலனை செய்திருக் கிறோம். பொலிவார்-மார்ட்டி உடன்பாடு என்றழைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் பிடல் காஸ்ட்ரோவும் சாவேசும் கையெழுத் திட்டிருந்தனர். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்துள் ளது என்பதையும் நாங்கள் பரிசீலனை செய்துள்ளோம்” என்று  குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சகோரத்துவம் மற்றும் ஒத்துழைப்பு பெரும் பங்களிப்பைச் செலுத்தும். இந்த இரண்டும் அதிகரிக்கும் வகையில் கியூபா மற்றும் வெனிசுலாவின் நடவடிக்கைகள் அமையும் என்று இரு தலைவர்களும் உறுதியளித்தனர். இந்த நாடுகளின் ஒத்துழைப்பு மாதிரி பிற நாடுகளுக்கும் உதவும். சகோதரர்கள்  என்று இரு நாடுகள் தங்களைக் கருதிக் கொண்டால் ஒத்துழைப்பு இயற்கையானதாக மாறிவிடும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.