பாரீஸ், பிப்.10- பிரான்ஸ் தலைநகரில் இரண்டு நாள் நடை பெறும் மூன்றாவது செயற்கை நுண்ணறிவு மாநாடு துவங்கியுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறக்கூடிய இம்மாநாடு செயற்கை நுண்ண றிவு (AI) துறையின் வளர்ச்சியில் உலக நாடுகளின் பங்களிப்புகள் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவை மிக முக்கியமான விவாதப்பொருளாக இருக்கும் என கூறப்படுகின்றது. 2023 இல் இங்கிலாந்தில் முதல் மாநாடும், 2024 இல் தென்கொரியாவில் சிறிய கூட்டமாக இரண் டாவது மாநாடும் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா வின் ஓபன் ஏஐ, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி என பல முன்னணி செயற்கை நுண்ணறிவுகளும் அவை அனைத்தையும் விட தற்போது உலக சந்தை யை உலுக்கிய சீனாவின் ‘டீப் சீக்’ செயற்கை நுண்ணறிவு வெளியாகியுள்ள காலத்தில் தற்போ தைய மூன்றாவது மாநாடு துவங்கியுள்ளது. இந்த பிரான்ஸ் உச்சி மாநாடு மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளது: அவை 1.) பரந்த அளவிலான பயனர்களுக்கு சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலை வழங்கு வது, 2.) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்காத வகையிலான செயற்கை நுண்ணறிவை உரு வாக்குவது, 3.) பயனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவின் உலக ளாவிய சமநிலையை உறுதிப்படுத்துவது ஆகிய வையாகும். சீனாவின் “டீப் சீக்” கிட்டத்தட்ட இந்த மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய நோக்கங்க ளையும் நிறைவேற்றும் வகையில் உலகச் சந்தை யில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக முத லாளித்துவ நாடுகளின் செயற்கை நுண்ணறிவுகள் லாபத்தை குவிக்கும் போட்டியை மட்டுமே ஊக்கு வித்து செயற்கை நுண்ணறிவுத்துறையிலும் சமத்து வமின்மையை அதிகப்படுத்தி வந்த நிலையில் “டீப் சீக்” கின் வருகை வளரும் நாடுகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டிற்கு பிரான்ஸ் தலைமை தாங்கு கிறது. இந்தியா துணைத் தலைவராக உள்ளது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றுள்ளனர். செயற்கை நுண்ணறிவுத்துறையில் அரசாங் கத்தின் முதலீட்டையும் ஆராய்ச்சியையும் இந்தியா அதிகரிக்கவில்லை. இந்நிலையில் சில ஒன்றிய அர சுத்துறைகளில் செயற்கை நுண்ணறிவை கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ள சூழலில் இந்தியா உள்ளிட்ட வளரும் தெற்குலக நாடுகளின் அடுத்த கட்ட பாதை எவ்வாறு இருக்கும் என இந்த மாநாடு பாதை வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.