பெய்ஜிங், பிப்.7- டாலரைக் கைவிட்டு தங்களது தேசிய நாணயங்களை வர்த்தகத்திற் காகப் பயன்படுத்துவது பற்றி சீனா வும், அர்ஜெண்டினாவும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன. சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. அதற்கான துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா வின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பல்வேறு உடன்பாடுகள் பற்றி விவாதித்தனர். தங்களது இரு தரப்பு வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவது பற்றி விவாதித்திருக்கி றார்கள். இதேபோன்று அர்ஜெண்டி னாவும் சீனாவுடன் பேச்சவார்த்தை நடத்தியிருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளைத் தாண்டி, அர்ஜெண்டினாவின் முதல் வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது. அர்ஜெண்டினாவில் விளை யும் பல்வேறு விவசாயப் பொருட்க ளை இறக்குமதி செய்வதில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மதிப்பு அமெரிக்க டாலரில் 1960 கோடி ரூபாயாக இருந்தது. டாலருக்குப் பதிலாக சொந்த நாணயங்களைப் பயன்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த ஒத்துழைப்பை சீனாவும், அர் ஜெண்டினாவும் பலப்படுத்தும். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் டாலருக்குப் பதிலாக சீனாவின் யுவான் மற்றும் அர் ஜெண்டினாவின் பெசோ ஆகிய வற்றைப் பயன்படுத்துவது செல வைக் குறைக்கும். அந்நிய செலா வணி பரிமாற்றத்தில் ஆபத்தையும் குறைக்கும் என்று சீன வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் ஹி லிபெங் கூறியுள்ளார்.
பட்டு சாலைத் திட்டத்தில் அர்ஜெண்டினா
கடல், நிலம் மற்றும் வான் வழி யாக வர்த்தகத்தை மேற்கொள்ள கட்டமைப்புகளை உருவாக்கும் சர்வ தேசத் திட்டம் ஒன்றை சீனா உரு வாக்கியுள்ளது. பல நாடுகள் அதில் இணைந்து வருகின்றன. அதில் இணைந்து கொள்ள அர்ஜெண்டினா வும் ஒப்புக் கொண்டுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அர் ஜெண்டினா ஜனாதிபதி ஆல்பர்ட் டோ பெர்னாண்டஸ் மற்றும் சீன வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் லிபெங் ஆகியோர் கையெழுத் திட்டுள்ளனர்.