world

நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலம் பூமிக்கு திரும்பியது

பெய்ஜிங், ஜூன் 26- நிலவின் தென் துருவத்தை ஆராயச் சென்ற சீன விண்கலமான சாங்’ இ-6 நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகளைச் சேக ரித்துவிட்டு செவ்வாயன்று பூமிக்குத் திரும்பி  வந்துள்ளது. இந்த விண்கலம் வடக்குச் சீனாவின் மங்கோலியப் பகுதியில் தரை யிறங்கியுள்ளது. கடந்த மே 3 அன்று பூமியில் இருந்து கிளம்பிய விண்கலம் 53 நாட்கள் கழித்து தனது பணியை முடித்து பூமிக்குத் திரும்பி யுள்ளது. இந்த விண்கலம் சேகரித்த நிலவின் பாறை மற்றும் மணல் மாதிரிகள் 2.5 மில்லி யன் ஆண்டுகள் பழமையான எரிமலை யினுடையதாக இருக்கும் என்றும், இந்த மாதிரிகள் நிலவின் இரு துருவம் குறித்த வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாங்’இ-6 விண்கலம் நிலவு ஆராய்ச்சி யில் வெற்றிகரமாகத் தன்னுடைய முழுமை யான இலக்கை எட்டிவிட்டது என்று சீன விண்வெளி ஆராய்ச்சித் துறையின் இயக்குந ரான ஷாங் கெஜியன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நிலவின் அறியப் படும் பகுதிகளில் இருந்து அமெரிக்காவும், ரஷ்யாவும் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. சந்திரயான் 3 செயற்கைக்கோளை நிலவின் தென் துருவத்தில் இறக்கி இந்தியா சாதனை படைத்தது.தற்போது சீன விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மணல் மற்றும் பாறை மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வெற்றிகரமாக பூமிக்கு எடுத்து வந்துள்ளது. விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்தில் நமது நாட்டின் முக்கிய சாதனை இது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆராய்ச்சியாளர்க ளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

;