சியாட்டில், அக்.17- அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போராடி வரும் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம் ஒரு மாதத்தை கடந்துள்ளது. பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவி னங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த 4 ஆண்டு களுக்கு 40 சதவீத ஊதியம் உயர்த் தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து 33 ஆயிரம் போயிங் விமான உற்பத்தி தொழிலாளர்கள் செப்டம்பர் 13 அன்று வேலை நிறுத்தத்தை துவங்கினர். இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளி பணியாளர்களின் சர்வதேச சங்கத்தின் தலைமையில் போயிங் உற்பத்தி தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து 2 ஆவது மாதமாக தொட ரும் சூழலில் அமெரிக்க அரசாங்க மோ தொழில் துறையோ, தொழிலா ளர்களுக்கு ஆதரவாக செயல்பட மறுத்தது. கடந்த மாதம் முதல் போராட் டத்தில் உள்ள தொழிலாளர்களில் சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்க ளை அல்லது தொழிலாளர்களில் 10 சதவீதத்தினரை வேலையை விட்டு அனுப்பப் போவதாகவும் போயிங் நிறுவனம் மிரட்டியது. நவம்பர் மாதம் முதல் 60 நாள் காலக்கெடு விதித்து இந்த பணி நீக்க கடிதத்தை அனுப்ப உள்ளதாக வும் தெரிவித்தது. இந்த மிரட்டலு க்கு அடிபணியாத தொழிலாளர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்ற னர். இந்த பணி நீக்க நடவடிக்கை க்கு போயிங் தொழிலாளர்கள் சங்க தலைவர்களும் இயந்திர வல்லுநர் கள் மற்றும் விண்வெளி பணியா ளர்களின் சர்வதேச சங்கத்தின் தலைமையும் கடுமையான கண்ட னத்தை பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்களை கண்டுகொள் ளாத அமெரிக்க தொழிலாளர் நலத் துறை தற்காலிக செயலாளர் ஜூலி போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து அக்டோபர் 14 அன்று நேரடியாக போயிங் நிறுவனத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்த இறங்கி வந்தார். போயிங் நிர்வாகம் 30 சதவீத ஊதிய உயர்வை மட்டுமே தர முடி யும் என பிடிவாதம் பிடித்தது. இந்தச் சூழலில் அமெரிக்காவே பிரமிக்கும் வகையில் அக்டோபர் 15 அன்று 33 ஆயிரம் தொழிலாளர்கள் பங் கேற்ற மாபெரும் பேரணி சியாட்டில் நகரில் நடைபெற்றது. போயிங் நிர்வாகத்தின் பணி நீக்க அறிவிப்பை தொடர்ந்து அதனு டைய பங்கு 1.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் தொழிலாளர்க ளின் போராட்டத்தால் 2025 ஆம் ஆண்டு டெலிவரி செய்ய வேண்டிய போயிங் 777, 737 மேக்ஸ், 767 ஆகிய ரக விமானங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவற் றை டெலிவரி செய்ய 2026 வரை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தால் பல நூறு கோடி டாலர்கள் வரை தனக்கு இழப்பு ஏற்படுவதாக போயிங் நிறு வனம் தெரிவித்து வருகிறது. தொழிலாளர்கள் கோரும் ஊதிய உயர்வு போயிங் நிறுவனத்தின் லாபத்தில் மிக மிகச் சிறு பகுதி மட்டுமே. ஆனால் போயிங் நிறுவனம் அதை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.