world

img

பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் 

பைசர் -பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து  கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. 
இந்த நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு பூசியை பொதுமக்களுக்கு வழங்க பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  10 நாட்களுக்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.  மேலும், 9ம் தேதிகளுக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் கூறப்பட்டது.
 

;