கேப் டவுன்,ஜூன் 14- தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஜனநாயகக் கூட்டணி, ஜூலு தேசிய வாத இன்கதா சுதந்திரக் கட்சி மற்றும் உதிரிக்கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஃபிக் கிலே முபாலூலா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கி ரஸ் கட்சி, தனது 30 ஆண்டுகால பெரும் பான்மையை இழந்தது. அதனை தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த கூட்டணி அழைப்பை அந் நாட்டின் இரண்டு பெரிய இடதுசாரிக் கட்சிகளும் புறக்கணித்தன. ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை நிலை நாட்டிக் கொள்வதற்காக வலது சாரி களுடன் கூட்டணி வைப்பது ஏற்க முடியா தது என தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தான் தென்னாப்பி ரிக்க காங்கிரஸ் கட்சி மைய-வலது ஜன நாயகக் கூட்டணிக் கட்சி (DA), ஜூலு தேசியவாத இன்கதா சுதந்திரக் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. “நாங்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற பொதுவான உடன் படிக்கையில் நாங்கள் ஒரு முன்னேற் றத்தை அடைந்துள்ளோம்,” என்று இந்த கூட்டணி குறித்து ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஃபிக்கிலே முபாலூலா அந்நாட்டு தலைநகர் கேப் டவுனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.