world

img

அர்ஜெண்டினா ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

பியூனஸ் அயர்ஸ்,டிச.21- அர்ஜெண்டினாவின் புதிய  ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜேவியர் மிலே கொண்டு வந்துள்ள   பொருளாதார சிக்கன நடவடிக்கைக ளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான  மக்கள் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைந்து  ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் வென் றால் நாட்டின் பெசோவை (நாணயத்தை) அமெ ரிக்க டாலராக மாற்றுவேன் என வாக்குறுதி கொ டுக்கும் அளவிற்கு  தீவிர  அமெரிக்க ஆதரவு வலதுசாரியான   ஜேவியர் மிலே . தேர்தலில்  வென்ற பிறகு  பொருளாதார சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கல்வி, சுகாதாரம், தொழிற் துறைக்கான  பொது முதலீடுகள் ஆகிய வளர்ச்சி திட்டங்களை வெட்டும் நடைமுறையை துவங்கி னார்.  மேலும் நாட்டின் 18  பேர் அமைச்சரவையை 9 ஆகக் குறைத்தார்.

உலகில் வளர்ந்து வரும் பொருளாதார கூட்ட மைப்பான பிரிக்ஸ் உறுப்பினர் அழைப்பை ஏற்காமல் நிராகரிப்பதாகவும் கம்யூனிஸ்ட் அரசுகளுடன் இணைந்து  செயல்படப்போவ தில்லை என்றும் மேற்குலக நாடுகளுடன் மட்டுமே எங்கள் வர்த்தகம் இருக்கும் எனவும் அறி வித்தார். நவீன தாராளமய கொள்கையால் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான அர்ஜெண்டினா மிலே ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் தீவிரமானது. இந்நிலையில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சீனா நாணயத்துடன் பரிமாற்றம் செய்ய ஒத்துழைப்பதாகவும்  அதற்காக  சீனா உதவ வேண்டும் என்றும் சீனா  ஜனாதிபதி ஜி ஜின்பிங்க்குக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே அந்நாட்டு அமைச்சர் பாட்ரி சியா புல்ரிச்,போராட்டத்திற்கான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தார். மேலும் மக்கள் போராடுவ தற்கு தடை விதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்தினார். 

இந்நிலையில் இடதுசாரி சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளால் பெரும் போ ராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொருளாதா ரத்தை  மீட்பது, முதலாளித்துவ சிக்கன நடவடிக் கையை  நிராகரிப்பது, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மற்றும்  போராட்டங்க ளுக்கு விதிக்கப்படும் தடைகளை திரும்பப் பெறுவது ஆகியவையே போராட்டத்தின் முக்கிய முழக்கங்களாக இருந்தன. 

போராட்டத்தின் போது சர்வதேச நாணய நிதி யத்துடனான ஒப்பந்தங்களும்,பொருளாதார சீர்திருத்தமும்  கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவதை  மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்தனர். மேலும் போராட்ட தடுப்புச் சட்டத்தை   ஒரு சட்டவிரோதம் என்றும்  ஜனநாயகமற்ற  முயற்சி என்றும் போ ராட்டத்தை குற்றமாக மாற்றக்கூடாது என்றும் கடு மையாக அதை எதிர்த்து திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.