அர்ஜெண்டினாவில் தீவிர வலதுசாரி ஜேவியர் மிலே பதவியேற்றதிலி ருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது எரிபொருட்களின் விலை 60 சதவீதமும், குழந் தைகளுக்கான டயாபர் விலை இரண்டு மடங்காகவும் உயர்ந்துள்ளது. கண்மூடித்தன மான முதலாளித்துவ சார்பு பொருளாதார நட வடிக்கையால் ஏற்பட்டுள்ள இந்த விளைவை பொருளாதாரத்தை சரிசெய்யும் போது ஏற்படும் விளைவு என திசை திருப்புகிறது அரசு.