அர்ஜெண்டினாவின் பணவீக்கம் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த அளவை விட அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் கடந்த மாதம் அந்நாட்டின் நாணயமான பெசோ மதிப்பு கடுமையாக வீழ்ந்ததை அடுத்து பண வீக்கம் அதிகரித்துள்ளது.