world

img

ஜி-7 மாநாட்டில் அர்ஜெண்டினா

ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டில் அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் கலந்து கொள்ளவிருக்கிறார்.

விருந்தினராகக் கலந்து கொள்ளும்படி அர்ஜெண்டினாவுக்கு ஜி-7 அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்டு, ஜனாதிபதியே அதில் கலந்து கொள்வார் என்று அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் காப்ரியலா செர்ருட்டி தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக வலுவான நாடுகள் என்று அழைக்கப்படும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், கனடா, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகியவை அடங்கிய ஜி-7  அமைப்பின் மாநாட்டில் முதன்முறையாக அர்ஜெண்டினா பங்கேற்கப் போகிறது. ஜூன் 26 முதல் 28 வரையில் இந்த மாநாடு நடக்கிறது. தென் அமெரிக்காவின் குரலை அந்த மாநாட்டில் அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் எதிரொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;