world

வெனிசுலா ஆட்சியை கவிழ்க்கத் துடிக்கும் அமெரிக்கா

கராகஸ், ஆக. 21- வெனிசுலாவில் மூன்றாவது முறையாக ஜனா திபதியாக வென்றுள்ள இடதுசாரியான நிக்கோலஸ் மதுரோ ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா, அதனு டைய ஊடகங்கள், எலான் மஸ்க் மற்றும் வலது சாரிகள் தீவிரமாக பல வகைகளில் முயன்று வருகின்றனர்.  

வெனிசுலா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த முடிவுகளை ஏற்க முடியாது, மறு  தேர்தலை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறியது. நியூயார்க் டைம்ஸ், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட வலதுசாரி ஊடகங்களும் வெனிசுலா விற்கு எதிரான போலிப்பிரச்சாரங்களை உலகம் முழுவதும் பரப்பத் துவங்கின.

வெனிசுலாவின் தீவிர வலதுசாரி அரசியல்வா தியான மரியா கொரினா மச்சாடோவும், எலான் மஸ்க்கும்    வெனிசுலா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அமெரிக்காவின் தூண்டுதலுக்கு ஏற்ப கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் வெறுப்புணர்வுகளை தூண்டி விட்டனர். இதனால் நாட்டின் தலைநகர் உட்பட பல இடங்களுக்கு கலவரங்கள்  பரவின. 

இது அமெரிக்கா நடத்த துடிக்கும் ஆட்சிக் கவிழ்ப்பின் ஒரு பகுதி தான். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளை எதிர்கொண்டு முறியடித்தது போல இந்த ஆட்சிக் விழ்ப்பையும் முறியடிப்போம் என அறிவித்து ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்தார்  ஜனாதிபதி மதுரோ. 

தற்போது அமெரிக்காவின் பெண்டகன், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகளின் இணையத் தாக்குதலால் வெனிசுலா பாதிக்கப்பட துவங்கி யுள்ளது.இந்த இணையத் தாக்குதல்கள் விபிஎன் (VPN) உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் இடங்களை மறைத்துக்கொண்டு நடத் தப்படுவதாகவும், பெரும்பாலான இணையத் தாக்குதல்கள் வடக்கு மாசிடோனியாவில் இருந்து நடத்தப்பட்டுள்ளது எனவும் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின்  தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் குற்ற வியல் பயன்பாட்டைத் தடுப்பதையும், எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டு வெனி சுலா அரசு, தேசிய சைபர் செக்யூரிட்டி கவுன்சிலை நிறுவுவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட இணையத் தாக்கு தல்கள் அனைத்தும் வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன. இது அந்நாட்டின் பொருளாதா ரத்தை மேலும் மோசமாக்கும் அபாயத்தை உரு வாக்கியுள்ளது.

வெனிசுலா  மீது ஏற்கனவே நூற்றுக்கணக் கான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விதித்துள்ளன. இதன் மூலம் அந்நாட்டு பொருளாதாரச்  சூழலை மோச மாக்கி  உள்நாட்டு அரசியலில் குழப்பத்தை உருவாக்கி அதனை சாதகமாக்கி கலவரங்கள் மூலமாகவோ,  ராணுவத்தை பயன்படுத்தியோ மதுரோவின் ஆட்சியை கவிழ்த்து வலதுசாரிகளை ஆட்சியில் அமரவைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.