world

img

பிஎஸ்ஜி கால்பந்து அணியின் பயிற்சியாளர் கைது

பாரீஸ், ஜூலை. 1- இனவெறி குற்றச்சாட்டு  காரண மாக கால்பந்து உலகின் பிரபல கிளப் அணியான பிஎஸ்ஜி அணியின் பயிற்சி யாளர் கிறிஸ்டோபர் கால்டியரை பிரான்ஸ் காவல்துறை கைது செய்தது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி (அர்ஜெண்டினா), மாப்பே (பிரான்ஸ்) ஆகியோர் விளை யாடி வரும் கால்பந்து உலகின் பிரபல கிளப் அணியான பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி (பாரீஸ் செயின்ட் ஜெர்மைன்) அணியின் பயிற்சியாளராக இருப்ப வர் கிறிஸ்டோபர் கால்டியர்.  இவர் கடந்த 2021-2022 காலகட்டத்தில் மற்றொரு பிரான்ஸ் கிளப் அணியான ஓஎன்ஜி நைஸ் (OGC Nice) அணிக்கு பயிற்சியாளராக இருந்த பொழுது, அந்த அணியின் கறுப்பின வீரர்களுடன் இனவெறியு டனும், முஸ்லிம் வீரர்களுக்கு இடையே பாகுபாடு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிரான்ஸ் போலீசார் கிறிஸ்டோபர் கால்டியர் மற்றும் அவரது மகன் ஜான் வலோவிக்கை கைது செய்து விசாரணை காவலில் அடைத்தனர்.