12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை
தேசிய பாதுகாப்பு எனும் பெயரில் 12 நாட்டு மக்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடையும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டுப் ப்பாடும் விதித்துள்ளார் டிரம்ப். ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரி யல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு பதிலடி கொடுப்பதில் ரஷ்யா உறுதி
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி தாக்குதல் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் தொலைபேசியில் உரையாடிய போது புடின் அந்த தாக்குதல் குறித்து கடுமையான முறை யில் வினையாற்றியதாக கூறப்படுகிறது. 40 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ விமானங்கள் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகின. மேலும் கிரீமியாவுடன் இணைப்பை உருவாக்கும் ரயில் மற்றும் சாலை பாலத்தையும் உக்ரைன் தகர்த்துள்ளது.
நியூஸிலாந்து எம்பிக்கள் சஸ்பெண்ட்
பழங்குடியின மக்களுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா நடனம் மூலம் 3 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபை உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி தற்போது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் எம்பி மைபி-கிளார்க் “மனம் வருந்துவதாக” கடிதம் கொடுத்ததால் 7 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ங்கரேவா-பேக்கர், ராவிரி வைடிட்டி ஆகிய இரு எம்பிக்கள் 21 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவுக்கு செல்லக்கூடாது இஸ்ரேல் மிரட்டல்
காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் வடக்கு பகுதியை நோக்கி வரக்கூடாது என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. காசாவில் கடந்த சில நாட்களாக உணவு வாங்க சென்ற 50 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுப் படுகொலை செய்து ள்ளது. இதனைத்தொடர்ந்து உணவு வழங்கி வந்த அமெரிக்க ஆதரவு அமைப்பும் உணவு விநியோகத்தை நிறுத்திக்கொண்டது. இந்நிலை யில் தான் வடக்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செயல்படுகிறது. அதனால் அங்கு செல்லக் கூடாது என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
தீ விபத்துக்கு காரணமான நபர்களுக்கு சிறை தண்டனை
கிரீஸ் நாட்டில் 2018 இல் ஏற்பட்ட மிக மோச மான தீ விபத்துக்கு காரணமான பத்து பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஏதென்சுக்கு அருகிலுள்ள மாட்டி என்ற கடலோர நகரம் பேரழிவை சந்தித்தது. இவ்விபத்தில் 104 பேர் உயிரிழந்தனர். 140 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவசர நிலை முறையில் செயல்படவில்லை என தீய ணைப்பு படை அதிகாரிகள், பாதுகாப்பு நட வடிக்கைகளில் தவறியதற்காக மாநில, நக ராட்சி அதிகாரிகள், காய்ந்த செடிகளை எரித்த முதியவரின் செயலால் தீ பரவியது என அவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.