லிமா, ஜன.17- ஜனநாயகத்தை மீட்க பெருவில் நடை பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டங் களைக் கட்டுப்படுத்த அரசியல் சட்ட உரிமை களை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை பதவி யில் இருந்து நீக்கி அவரைச் சிறையில் அடைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி இதை எதிர்க்கட்சிகள் செய்துள்ளன. இதற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் அடக்குமுறைக்கு 50 பேர் பலியாகியிருக் கிறார்கள். மக்கள் எழுச்சி அதிகரித்து வரும் நிலையில் உரிமைகளை ரத்து செய்யும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.