டெக்சாஸ்
அமெரிக்காவில் கொரோனா அலை மீண்டும் துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில் தினசரி பாதிப்பு 1.43 லட்சமாக உள்ள நிலையில், இயல்பு நிலையில் உள்ள அமெரிக்க மக்கள் பீதியடைந்துள்ளனர். இதில் ஒமைக்ரான் வேறு தனியாக பரவுகிறது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 73% பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கவலையுடன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் 50 வயதுமிக்க நபர் ஒருவர் ஒமைக்ரான் தொற்றுக்கு பலியாகியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தான் அமெரிக்காவின் முதல் ஒமைக்ரான் பலியாகும். இதற்கு முன் பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துளார். உயிரிழந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர் என டெக்சாஸ் பகுதி அரசு தெரிவித்துள்ளது.