world

img

லட்சக்கணக்கானோர் வேலை நிறுத்தம் ஜெர்மனியிலும் எழுச்சி

ஜெர்மனியின் அனைத்து வகை போக்கு வரத்துத் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி  பெரும் எழுச்சியுடன் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆணைப்படி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் விசுவாசமாக நடைமுறைப்படுத்தி வரு கின்றன. இந்தத் தடைகளால் அமெரிக்கா வுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. எரிபொருள் பற்றாக் குறையால் பல துறைகள் முடங்கியுள்ளன. விலை வாசி உயர்வு பெரும் அளவில் உள்ளது. தங்கள்  ஊதியம் போதுமானதாக இல்லை என்று அனை த்துத்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் கோபத்துடன் இருக்கிறார்கள். பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஜெர்மனியிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தும், அரசும், நிர்வா கங்களும் அதைக் கேட்காத நிலையில், வேறு  வழியில்லாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கி யிருப்பதாக வெர்டி என்ற தொழிற்சங்கம் கூறி யுள்ளது. இந்தத் தொழிற்சங்கம் மட்டும் 25 லட்சம் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. மேலும் பல்வேறு தொழிற்சங்கங் களும் வேலை நிறுத்தம் செய்யுமாறு தங்கள் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது

“மக்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுவார்களே” என்று வெர்டி தொழிற்சங்கத் தலைவர் பிராங்க் வெர்னெகே யிடம் கேட்டபோது, “ஒருநாள் பாதிப்புதான் இது என்றதோடு, ஊதிய உயர்வு உடன்பாடு எட்டப்பட வேண்டும். இல்லையென்றால் வாரக் கணக்கில் பாதிப்பு இருக்கும்” என்றார். ஊதியத்தில் 10.5 விழுக்காடு உயர்வு வேண்டும்  என்பது வெர்டி உள்ளிட்ட பல தொழிற்சங்கங் களின் கோரிக்கையாகும். சில தொழிற்சங்கங் கள், 12 விழுக்காடு வரையில் ஊதிய உயர்வு இருந்தால்தான் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று கூறுகின்றன. போக்குவரத்து மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளையும் நீக்குமாறு ஜெர்மனியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் ஆணையிட்டுள்ளார். இரவில் தாமதமாகவும் விமானங்களை இயக்குமாறும், பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள பயணிகளை அவரவர் இடங்களுக்குக் கொண்டு சேர்க்கு மாறும் அவர் கோரியுள்ளார். ஆனால், பல்வேறு  சர்வதேச விமான நிலையங்களும் பாதிக்கப் பட்டன. கிட்டத்தட்ட 4 லட்சம் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

அரசே பொறுப்பு

உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும், பிற ஐரோப்பிய நாடுகளைப் போன்று ஜெர்மனியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தகைய போராட்டங்களில் முதன்முறையாகத் தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை. மார்ச் முதல் வாரத்தில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 350 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அனைத்துப் போக்குவரத்துத் துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.  விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் மற்றும் சுரங்க ரயில்கள் என்று அனைத்துப் போக்கு வரத்தும் வேலை நிறுத்தத்தால் கடும் பாதிப்புக் குள்ளாகியுள்ளன. உக்ரைன்- ரஷ்யா நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அத்தி யாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற் சங்கங்களும் நீண்ட போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன.