தொழிலாளர்களை மீண்டும் பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்நிறுவனம் பல பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவின் மூலமாக பணிகளை செய்வதால் அந்த பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. கடந்த மாதம் கூட 6000 தொழிலாளர்களை திடீரென பணியை விட்டு நீக்கியது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளை நிறுவன மறு சீரமைப்பது என அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
உலகளாவிய உற்பத்தி வீழ்ச்சி
மொத்த உலக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2025 மற்றும் 2026 ஆண்டில் 2.9 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது. 2024 இல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.3 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் பொருளாதார தடைகள், நிதி நெருக்கடி, நுகர்வோர் நம்பிக்கையை பலவீனப்படுத்துதல், பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளால் பாதிக்கப்படும் எரிசக்தி துறை
டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகள் அமெரிக்க எரிசக்தித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என வுட் மெக்கன்சி என்ற முன்னணி எரிசக்தி மற்றும் இயற்கை வள பகுப்பாய்வு ஆலோசனை நிறுவனம் எச்சரித்துள்ளது. வர்த்தகப் போர்கள் எண்ணெய் தேவையில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியைக் குறைக்கலாம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டைத் தடுக்கலாம் மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய போட்டித்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், எரிபொருட்கள் விலையை உயர்த்தும் என எச்சரித்துள்ளது.
தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்
தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜூன் 3 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நாடு முழுவதும் உள்ள 14,295 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னால் ஜனாதி பதி யூன் சுக் யோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி ஒரே இரவில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகான அரசியல் மாற்றங்களை தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு: மங்கோலியப் பிரதமர் பதவி விலகல்
மங்கோலியப் பிரதமர் லுவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டீன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பல மாதங்களாக போராட்டம் நடத்து வந்த நிலையல் அவர் பதவி விலகியுள்ளார். பல பத்தாண்டுகளாக இந்நாடு ஊழலில் சிக்கியுள்ளது. அந்நாட்டின் நிலக்கரியை சுரண்டி கொளுத்துப்போன கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டு நாட்டு மக்களின் அதிக வரிககள் விதிக்கப்பட்ட நிலையில் போராட்டம் வெடித்துள்ளது.