ஹவானா, அக்.29- கியூபா தலைநகர் ஹவானாவில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடு நடை பெற்றது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதற்கான அழைப்புடன் அக்டோபர் 27 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில் 65 நாடுகளைச் சேர்ந்த 160 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி பங்கேற்றார். இம்மாநாட்டில் உலகம் முழு வதும் உள்ள 82 இடதுசாரி கட்சிக ளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொள்ளும் சவால் கள், ஒற்றுமையை வலுப்படுத்துவ தற்கான வழிகள் குறித்து இம்மாநாட் டில் விவாதிக்கப்பட்டது. இந்த அமைப்பு 1998 இல் கிரேக்கத்தில் உரு வாக்கப்பட்டது. 117 கட்சிகள் உறுப்பி னர்களாக உள்ளன. 22ஆவது மாநாட்டில் பங்கேற்ப தற்காக ஹவானா வந்துள்ள எம்.ஏ.பேபி, புரட்சி நட்சத்திரம் சே குவேராவின் துணைவியார் அலெய்டா குவேரா மார்ச் மற்றும் மகள் அலெய்டா குவேராவை சே குவேரா மையத்தில் சந்தித்தார். இரு வரும் சே தொடர்பான நான்கு புத்த கங்களை பேபிக்கு வழங்கினர்.